Pages

28.4.11

காத்துதான் இருக்கிறோம்

காத்துதான்
 இருக்கிறோம்
கயவன்
 கழுத்தறுக்க
 கழுகுக்கு
 இறையாக்க
கடல் எங்களுக்கு
எல்லையில்லை
காத்துதான் இருக்கிறோம்
ஒடிந்த கைகளும்
முறிந்த கால்களும்
எங்களுக்கு முடக்கம் அல்ல
காத்துதான் இருக்கிறோம்
தந்தையும் வருவான்
என் பிள்ளையும் வருவான்
காத்துதான் இருக்கிறோம்
தலைவன் வருவான்
தங்க தேரிலே ,,,
காத்துதான் இருக்கிறோம்
ஈழத்திற்கு ஈடு
வேறு ஏது
காத்துதான் இருக்கிறோம்
உரிமை
அது எங்கள்  கடமை
அதுதான் எங்கள் உடமை
காத்துதான் இருக்கிறோம்
தலைவன் இருக்கிறான்
தலைவன் வருவான்
ப. கெளதம்

16.4.11

கோழைகளுக்கு கோடி ரூபாய்

பந்தை போடுவான்
அதை பறக்க வைக்க
கையிலே உரை
தலையிலே கவசம்
ஆண்மையை காக்க
அதுக்கு ஒரு கவசம்
முட்டாள் ரசிகன்
உள்ளே வராம இருக்க
முள் வேலி
விக்கினால் ,,,,
விளம்பரம்
மாலை ஆனா மயக்கம்
கேட்டாள் போர் வீரன்
என்கிறார்கள்
ஏறினால் ஏரோப்ளேன்
இறங்கினால் ஹம்மர் கார்
என் ஈழ மக்கள் போரிலே
போராடி கொண்டிருக்கும் போது
தோட்டாக்களை தோளிலே
சும்ந்தார்களே எங்கள் போராளிகள்
நீங்கள்
பந்தை தடுக்க
தலையில் கவசம்
முழம் காலுக்கு முக்காடு
கொட்டைக்கு கோட்டை
கோடி கோடி சம்பரிதாலும்
உங்களுக்கு அரசு வேலை
ரயிலிலே ஓசி பயணம்
ஆயிரம் வீடு
உங்களுக்கு இருந்தாலும்
அரசு ஒதுக்கும் உயர்ந்த வீடு
அட பாவிகளா
அரசியல்வாதிகளே
தோற்று போவார்கள்
உங்களிடம்
மும்பையில் தீவிரவாதி
தாக்கும் போது
காவலர்களுக்கு நல்ல கவசம்
இல்லாமல் இறந்து போனாரே
ஒரு காவலன்
காவலனை காப்பற்ற முடியாத
இந்த அறசு உங்களுக்கு மட்டும்
கோடி கோடியாய் கொடுப்பது
ஏன் ,,,,,,,,,,
கபடி ஆடினால்
கை முறியும்
கால்பந்து ஆடினால் கால் முறியும்
ஒலிம்பிக் கில் ஓடி ஒளிவோம் ,,,,
இந்திய அரசே
கோழைகளுக்கு கோடி எதற்கு ,,,,,,,,,,,
ப. கெளதம்